Monday, September 07, 2015

ஒரு காலைத் தூக்கியது ஏன்?

இயற்றியவர்: மாரிமுத்தாப்பிள்ளை
இராகம் : தோடி / விளரிப்பாலை
தாளம் : ஆதி


பல்லவி:
எந்நேரமும் ஒரு காலைத் தூக்கிக்
கொண்டிருக்கின்ற வகை ஏதையா?

அனுபல்லவி:
பொன்னாடர் போற்றும் தில்லை
.....நன்னாடர் ஏத்தும் தில்லை
பொன்னம்பல வாணரே
.....இன்னும் தானும் ஊன்றாமல்
(எந்நேரமும் ஒரு...)

சரணம்:
எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ?
....எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ?

சிக்கனவே பிடித்து சந்திரனை நிலத்தில் தேய்த்த போதிலுரைந்தோ?
....உக்கிர சாமுண்டியுடன் வாதுக்காடியசைந்தோ?

உண்ட நஞ்சு உடம்பெங்கும்
.....ஊறிக் கால் வழி வந்தோ

தக்க புலி பாம்பிரு வாக்கும் கூத்தாடியாடி
....சலித்துத்தானோ பொற்பாதம் வலித்துத்தானோ தேவரீர்
(எந்நேரமும் ஒரு...)

4 comments:

  1. ஆஹா! ஒவ்வொரு காரணமும் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    ReplyDelete
  2. இந்த பாடலை எந்த வித்துவானும் பாடியதாகத் தெரியவில்லையே!
    தமிழில் பாடல்கள் குறைவு என வேறு கூறுகிறார்கள்.
    நீசமொழிப் பாடலென தள்ளி வைத்து விட்டனரோ?
    யாராவது பாடிய MP3 இருந்தால் இடவும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க யோகன்! நானும் இந்தப் பாடலை யாரும் பாடிக் கேட்டதில்லை இதுவரை. நீங்கள் குறிப்பிட்ட பின் தேடிப் பார்த்ததில் சஞ்சய் சுப்ரமணியம் பாடியிருக்கிறார் என்பது தெரிகிறது:
      http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=18667&ncat=8&Print=1

      ஒலிக்கோப்பு ஏதேனும் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

      Delete
  3. தன்யாசியில் மிகவும் நன்றாக பாட முடிகிறது.
    தோடியில் செட் ஆக வில்லையே !!

    வைட் ..என் தங்கை கிட்ட அட்வைஸ் கேட்கறேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete