Monday, October 21, 2013

Peace : விவேகானந்தர் கவிதை



சென்ற பதிவில் பார்த்த சுவாமி விவேகானந்தரின் கவிதையை இங்கு விரிவாகப் பார்ப்போமா?

சற்றே முரணான வார்த்தைகளைக் கொண்ட அக்கவிதையின் பொருள்தான் என்ன?
முதல் நான்கு வரிகளுடன் துவங்குவோம்:




Behold, it comes in might,
The power that is not power,
The light that is in darkness,

The shade in dazzling light.

விழித்திரு, அது வலிமையில் வருகிறது.
சக்தி இருப்பினும் வெளிப்படாத சக்தி அது,
இருளிலும் இருக்கும் வெளிச்சம் அது,
சுடரொளியிலும் இளைப்பாற நிழல் அது.

எப்போதும் எதையோ தேடிக் கொண்டே இருக்கும் அன்றாட வாழ்வில், எப்போது நாம் ஆன்ம சாந்தியை நாடி இருக்கிறோம்? எப்போதும் இல்லை. இருப்பினும் அது நம்மிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆன்ம சாந்தியின் இருப்பிடத்தை, இருப்பினை, அதன் வலிமையில் உணர்ந்திடுவாய், அதற்காக விழித்திரு என அறைகூவல் விடுக்கிறார் முதல் வரியிலேயே. சில நேரங்களில் விவேகானந்தர் தன் சீடர்களுக்கு இதுபோன்ற அறிவுரைகளை வழங்குவதுண்டு.

அதில் சக்தியும் அடக்கம் என்றாலும், அது எந்த ஒரு தனித்துவமான பொருளாகவும் இல்லாததால் அதில் தனியானதொரு சக்தியும் இல்லை. "இந்த குணத்துடன் கூடிய", இந்த நபர் என்று சொல்ல இயலாமல் போவது போல. மாற்றாக எல்லா குணங்களும் கூடி, சகலமும் சாந்தி பெற்று அடங்குதல். 
சக்தி தனியாக விளைவிப்பது ஆக்கம். ஆக்கமற்ற நிலையில் சக்தி இருப்பினும் அது வெளிப்படாத நிலையில் இருப்பது அது.

ஒளி இல்லாத இருளில் வேறுபாடு இல்லை. எல்லாம் ஒடுங்கிய பின் இருளில் கிடைப்பது அமைதி. எல்லா புலன்களையும் கடந்து மனமும் அமைதி அடைகையில், எல்லாமும் ஆன ஆன்ம சாந்தி ஒளி - அமைதியான இருளிலும் அஃதே பேரொளி!

சுடரொளியானாலும், அமைதியான மனம் வெண்மையான நிழற்குடையின் நிழலின் நிலைபெறும் சாந்தி. ஆகையால், அந்த நிழற்குடையாய் இருப்பதும் அது.

It is joy that never spoke,
And grief unfelt, profound,
Immortal life unlived,
Eternal death unmourned.


அது மௌனமான இன்பம்

மனதால் உணரப்படாத பாரம், ஆழமான பொருள்,
அமரத்துவமான, வாழாத வாழ்க்கை
அமரத்துவமான, துயரமில்லா இறப்பு.

இன்பமும் மகிழ்ச்சியும் எப்போதும் ஓசையோடு வெளிப்படுவது வழக்கம். ஆனால்  அதனில் ஓசையில்லாமால் மௌனமும் இன்பம். இன்பம் மட்டுமல்ல துயரமும் கூட - ஆனால் அது மனதால் உணரப்படாத பாரம். அது சாதாரணமாக மறந்து விடக் கூடியதான வழக்கமான நிகழ்வல்ல. அது ஆழமான பொருள் தருவது.
அது இறப்பில்லாத அமரத்துவமான வாழ்க்கை - ஆனால் யாரும் - அதை எந்த ஒரு ஜீவனும் வாழ்க்கையாக வாழந்ததில்லை. அதை நித்யமான இறப்பென்றும் சொல்லலாம். ஆனால் அவ்விறப்பில் துயரப்படுவதற்கோ, சோகப்படுவதற்கோ ஏதுமில்லை. 



It is not joy nor sorrow,
But that which is between,
It is not night nor morrow,
But that which joins them in.

அது, இன்பமும் இல்லை, துயரமும் இல்லை
ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட ஒன்று.
அது இரவும் இல்லை அதன் மறுநாளும் இல்லை
ஆனால் அவ்விரண்டையும் இணக்கும் பாலம்.



It is sweet rest in music;
And pause in sacred art;
The silence between speaking;
Between two fits of passion --
It is the calm of heart.


அது இசையின் இடையே இனிய நிறுத்தம்
மற்றும் வரைகலையில் தொடர்வுக்கு முன்னே நிறுத்தம் ;
பேச்சிற்கு இடையே மௌனம்
ஆர்வ வெளிப்பாட்டிற்கு இடையே -
மனதின் அமைதி.




It is beauty never seen,
And love that stands alone,
It is song that lives un-sung,
And knowledge never known.

அது பார்த்திராத அழகு
மற்றும் தனியாக நிற்கும் அன்பு
அது பாடப்படாத பாடல்
மற்றும் அறியப்படாத அறிவு.



It is death between two lives,
And lull between two storms,
The void whence rose creation,
And that where it returns.

அது இரண்டு ஜென்மங்களுக்கு இடையேயான இறப்பு
மற்றும் இரண்டு புயல்களுக்கு இடயேயான அமைதி
அது படைப்பிற்கு முன்னேயான வெறுமை
மற்றும் படைப்பின் பின்னேயான பரிணாமங்கள் 




To it the tear-drop goes,
To spread the smiling form
It is the Goal of Life,
And Peace -- its only home!

அதற்கான கண்ணீர்
அதன் புன்னகையை எங்கும் எடுத்துச் சென்றிட
அதுவே வாழ்க்கையின் குறிக்கோள்
ஆம், ஆன்ம சாந்தியே - அதன் ஒரே வீடு!.

No comments:

Post a Comment