Monday, November 26, 2012

வாழும் இறைவன் : சுவாமி விவேகானந்தர்


"வாழும் இறைவன்" என்ற தலைப்பில், சுவாமி விவேகானந்தர் எழுதிய கவிதையின் தமிழாக்கம்:

மீண்டும் மீண்டும் பிறந்து, ஆயிரமாயிரம் துயர் பட வேண்டும்.
ஏனெனில், நிஜமான இறைவனை வழிபட வேண்டும்.
நான் நம்பும் ஒரே இறைவன் - அவன்
எல்லா ஆன்மாக்களின் கூட்டுத் தொகுதியாய் இருக்கிறான்.

அவன் உன்னுள்ளும், அதன் வெளியேயும் இருந்து,
உழைப்பாளிகளின் ஒவ்வொரு கையிலும்  செயல்பட்டு,
நடமாடும் ஒவ்வொரு கால்களிலும் நடந்து வருகிறான்.
அவன் உடலில் இருப்பது நீ.
அவனையே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!

உயர்விலும் தாழ்விலும், துறவியிலும் பாவியிலும்,
கடவுளிலும் புழுவிலும்,
காணக்கூடிய, அறியக்கூடிய, உண்மையான எங்கும் நிறைந்த
அவனையே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!

முற்பிறவியும் அடுத்த பிறவியும் இல்லாமல்,
இறப்பும் இல்லாமல்,
வருவதும் போவதும் இல்லாமல்,
எப்போதும் நாம் 'ஒன்றேயென' அவனில் இருப்பதுமான,
அவனையே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!

இப்படிப்பட்ட "வாழும் இறைவனை"யும் அவனது பிரதிபலிப்பையும்
புறந்தள்ளி, பொய்யான நிழல்கள் பின்னால் அலையும் மூடர்களே,
இதனால் சண்டையும் சச்சரவும்தான் மிச்சம். கண்கண்ட
இறைவனயே வணங்குவோம், மற்ற சிலைகளை உடைத்து விடலாம்!

================================

இதன் ஆங்கில வரிகளையும், ஆங்கிலப் பாடலாகப் பாடுவதையும் இங்கே பார்க்கவும் கேட்கவும் செய்யலாம்.

No comments:

Post a Comment