Monday, September 17, 2007

தட்டாமல் தங்கும் தளை?

"இயன்றவறை இனிய தமிழில்" பதிவில் வாஞ்சிநாதன் ஒரு தலைப்பைக் கொடுத்து வெண்பா வடிக்கச் சொன்னர். இதுவரை மரபில் பாட்டெழுதி பரிச்சயம் இல்லை. சரி இப்போதாவது முயன்று பார்ப்போமே, என்று முயன்றேன்:

பா எழுத கொடுக்கப்பட்ட கருத்து இதுதான்:

If it were possible to heal sorrow by weeping and to raise the dead with tears, gold were less prized than grief.

இந்த கருத்தை தமிழில் தர வேண்டும் - பாவாக.

முதலில் நான்கு வரிகள் வருமாறு மேற்சொன்ன கருத்தை கவிதை வடிவில் எழுதிக் கொண்டேன். அடுத்ததாக சீர்களை சீராக வேண்டும். தளைகள் தட்டாமல் தட்டிக் கொடுக்க வேண்டும்.

இதற்காக தெரிய வேண்டிய இலக்கணம் எல்லாம் இவ்வளவேதான்:

1. காய் முன் நேர்

2. விளம் முன் நேர்

3. மா முன் நிரை

4. ஓரசை / நான்கு அசை சீர்கள் கூடாது

5. கனி வேண்டாம்

6. கடைசி சீர் - நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்ப்பாடுகளில் ஒன்றில் முடிய வேண்டும்.


ஆகா, இவ்வளவுதானா இலக்கணம் என்று தளைகள் தட்டாமல் பார்த்துக் கொண்டதில், விளைந்த பா:

புலம்பி அழுதால் மறைந்திடும் அன்பர்
திரும்பி வருவாரோ? கேளுமய்யா சுத்தசிவம்
அந்தோ வருகின் அழுகையும் விற்காதோ
ஆயிரம் பொன்னின் விலை.

மேற்சொன்ன பதிவுக்கு சென்றால் உங்களுக்கே தெரியும், எத்தனை பேர் எத்தனை வடிவாக, எத்தனை சரளமாக பா வடித்திருக்கிறார்கள் என்று. அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், ஏதோ முதல் முறை முயன்றதற்கு தேவலாம் என்று நினைத்திருந்தேன்.

பதிவாசிரியர் வாஞ்சிநாதன், பாவைப் பார்த்து விட்டு தன் மறுமொழியை பகிர்ந்தார்:


ஜீவா வெங்கட்ராமன், உங்களுடைய பா " அழுகையும் விற்காதோ ஆயிரம் பொன்னின் விலை" என்று முடிவது அழுத்தமாக இருக்கிறது (equivalent to a thousand golden exit lines!) ஆனாலும் எதுகையில் கவனம் தேவை. "அந்தோ" என்ற குறில்+ மெய் தொடக்கத்திற்கு எதுகை இல்லாவிட்டாலும் வேறாதாவது "குறில்+ மெய்" கொண்டு ஈற்றடியைத் தொடங்கினால்தான் பாவின் ஏற்றம் இறக்கம் சரியாக இருக்கும்
வெண்டளை தவறாமல் வருகிறதால் நீங்கள் தேர்ந்தவர் என்று தெரிகிறது.



தளையில் வெண்டளை என்றால் என்ன, பாவில் இதுவென்ன ஆசிரியப்பாவா, இவையெல்லாம் அடியேன் அறியேன்! ஆனால், முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றாயிற்று, இனி அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியதுதான்!


பின்னர் என் அப்பாவிடம் இந்த கவிதையை காட்டியதில் அவர் சொன்னது:


தொடங்குதல் எப்பொழுதுமே மங்கலமாயிருப்பது மரபு.
அதனால் தான் அந்தக்காலத்தில் அத்தனை புலவர்களும் கடவுள் வாழ்த்துக்குப் பிறகு எந்தக் காவியத்தையும் படைத்தார்கள்.
காவியம் என்று மட்டும் இல்லை, எந்த புது முயற்சியும் அப்படித்தான்.
அதனால் வேறு ஏதாவது வாழ்த்துக் கவிதை எழுதிவிட்டு, கவிதை எழுதத் தொடரலாம். இதற்கு முன் ஏதாவது எழுதியிருந்தால் சரி.


சரி, நாமும் கடவுள் வாழ்த்துப் பா எழுதாலாம் என துவங்க, எல்லா வெற்றிகளுக்கும் துவக்கமாய் இருக்கும் மூலதார முதல்வன், விநாயகனை முன்னிறுத்தி, இதோ என் அடுத்த முயற்சி:

சக்திமகன் வேழமுகன் என்றும் அருளிடுவாய்

முக்திதரும் நீள்பாதை ஒன்றில் நடந்திட

நீதருவாய் ஆனைமுகா தங்கத் தமிழ்தனில்

தட்டாமல் தங்கும் தளை.


நீங்களும் வெண்பா எழுத முயலலாமே?

தமிழ் மன்ற மையத்தில் வெண்பா எழுதவது பற்றி கட்டுரை ஒன்றும் இங்கே படிக்கலாம்!

சந்த நயத்துடன் புதுக் கவிதை எழுதவும், மரபிலக்கணம் தெரிந்திருந்தால் பெரிதும் துணை புரியும்.

"கவிதை எழுதப் பழகலாம் வாங்க" பதிவைப் படித்தாயிற்றா?

11 comments:

  1. Anonymous8:17 AM

    நல்லா இருக்குங்க கவிதை!

    ReplyDelete
  2. வாங்க சயந்தன்!

    ReplyDelete
  3. நானும் ஒரு முயற்சி செய்துள்ளேன்..

    http://tamildasan.blogspot.com/

    ReplyDelete
  4. mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

    ReplyDelete
  5. தமிழ்தாசன்,

    தளைகள் தட்டாமல் வந்திருக்கின்றன, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. Anonymous1:25 AM

    //மறைந்திடும் அன்பர்//

    சரியா வருமா? இலக்கணப்படி கேட்கலை

    லாஜிக்கலா கேட்கிறேன்.

    ReplyDelete
  7. //சரியா வருமா...?//

    வாங்க பெ.கா.கொ!

    மறைந்திடும் == மறைந்து கொண்டே இருக்கும்...

    நிகழ் காலத்தில் இருக்கலாமா என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்...?



    புலம்புவரைப் பொறுத்தவரையிலாவது(!), அப்படி இருந்தால் திரும்பி வர மாட்டாரா என்ற ஏக்கத்தில் புலம்புகிறார் எனக் கொள்ளலாம்! அதனால் அந்த வினையை நிகழ்காலத்தில் அமைத்தேன். 'மறைந்துவிட்ட' என்ற இறந்த காலத்தில் அமைத்திருந்தால் - மாண்டார் மீள்வாரே என்ற நெருடல் தோன்றுவதை தவிர்க்க!



    'மறைந்திடும் அன்பரும்' என்று வந்திருந்தால் இன்னமும் நன்றாக வந்திருக்கும்!. ஆனால் அந்த சீர் விளமாகுவதால் அடுத்த சீர் நேரசையில் தொடங்க வேண்டும். பின்னர் 'புலம்பி' க்கு எதுகையில் 'திரும்பி' யயை இட இயலாது!

    ReplyDelete
  8. இங்குநீர் செய்த இருவெண்பா வும்அருமை
    பொங்குதமிழ் ஆடவிட்டீர் பூத்து! ---அகரம்.அமுதா

    அவ்வெண்பாக்களில் தமிழ் வெள்ளம் போல்பொங்கிவரச்செய்து (ஓர் பூவைப்போல் பூத்து) ஆடவிட்டீர் என்று கூட்டிப் பொருள் கொள்ளவும்!

    ReplyDelete
  9. அருமையெனப் பொங்கும் தமிழில் பூவெடுத்துப்போட்டு வாழ்த்தியமைக்கு நன்றிகள்,
    அகரம் அமுதா.

    ReplyDelete
  10. Anonymous5:20 AM

    Hi sir,
    I tried to write a venbaa using the theme u gave.

    வேண்டார்கள் பொன்னை வேட்பார்கள் துயரை

    தீண்டார்கள் தங்கத்தை என்றும் - மாண்டாரின்

    உயிர்கொண்டு வருதலும் துன்பத்தைத் தணித்தலும்

    துயர்கொண்டு செயத்தக்க விடின்

    Please check and tell whether is it acceptable as per the rules of venbaa. Please give in your comment in the same blog. I will see in your comment in this blog itself

    ReplyDelete
    Replies
    1. Hello Sir:
      முதல் இரண்டு அடிகளில் தளை தட்டும் இடங்கள்:

      பொன்னை : நேர் நேர் : தேமா. ஆகாயால் அடித்த சீர் நிரையில் துவங்க வேண்டும்.
      அதேபோல, அடுத்த அடியில், "என்றும்" என்னும் மாச்சீரை தொடர நிரை வேண்டும்.

      வாழ்த்துக்கள்!

      Delete