Sunday, March 20, 2005

ஒரு உண்மைச்சம்பவம்

இது அட்லாண்டாவில் சென்ற வாரம் நடந்த உண்மைச்சம்பவம்.
இந்த சம்பவத்தில் அதிசயத்தக்க புத்திசாலிதனத்துடன் செயல்பட்ட பெண்மணி - ஆஷ்லி ஸ்மித். இவர் திருமணமாகி, கணவரை நான்கு வருடங்களுக்கு முன்பு இழந்தவர். இவருக்கு ஒரு 5 வயது பெண் குழந்தை உண்டு. சம்பவம் நடந்தபோது, குழந்தை வீட்டில் இல்லை.
இப்போது சம்பவத்திற்கு வருவோம்.
இடம்: டுலுத் (அட்லாண்டாவின் புறநகர்ப் பகுதி))
அதிகாலை 2:30 மணி அளவில், பக்கதில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்புகிறார், ஆஷ்லி ஸ்மித்.
அப்போது, மறைந்து இருந்த வாட்ட சாட்டமான, ஆஃப்ரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்த ஒருவனும் வீடு புகுந்து விடுகிறான்.
அவனை பார்த்தவுடன் தெரிகிறது. அவன் நேற்று தோலைக்காட்சிப்பெட்டியில் காட்டப்பட்ட ஆள். கற்பழிப்பு குற்றத்திற்காக, நேற்று விசாரணை நடக்கும் பொழுது, காவலர்களிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கிகொண்டு நீதிபதியையும், உதவி ஷெரிஃப்-ஐயும் (அவர் பெண்) சுட்டுதள்ளிவிட்டு, நீதிமன்றத்திலிருந்து தப்பிவிட்டான்.
அவன் பெயர் ப்ரையன் நிக்கலோஸ்.
கையில் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த அவன், முதலில், ஆஷ்லி ஸ்மித்-ஐ டேப், திரைச்சீலை மற்றும் வயர்கள் கொண்டு நாற்காலியில் கட்டிப்போடுகிறான். கத்த முயன்ற ஆஷ்லி ஸ்மித்தை, கத்தினால் மேலும் உயிர்சேதம் ஏற்பட்டக்கூடும் மிரட்டி மேலும் அதை தான் விரும்பவில்லை என்றும் கூறுகிறான். ஏதேனும் ஏடாகூடம் செய்தால் ஸ்மித்-ஐ பிணையக்கைதியாய் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் மிரட்டுகிறான். பயந்து போயிருக்கும் ஆஷ்லி ஸ்மித்-ஐ பார்த்து, தான் யாரையும் கொல்ல விரும்பவில்லை என்றும், தனக்கு தற்போது வேண்டியதெல்லாம் சற்று ஓயவும், நல்ல சாப்பாடும் தான் என்கிறான்.
பின்னர் அவன் போய் குளித்துவிட்டு, பழைய ட்-ஷ்ர்ட் ஒர்றை கேட்டு வாங்கி போட்டுக்கொள்கிறான்.
இப்படியே, காலை மணி 6 ஆகிறது.
காலையில், தன் குழந்தையை பார்க்க்ப்போகவதற்ககா, அனுமதி கேட்கிறார் ஆஷ்லி ஸ்மித். நிக்கலோஸோ அனுமதி மறுக்கிறான். தன் கணவர் இறந்து விட்டார் என்றும், தன்னை விட்டால் தன் குழந்தைக்கு வழியேதும் இல்லை என்றும் சொல்கிறார். அப்போதும் அனுமதி இல்லை.
பின்னர், பேச்சு தோடர்கிறது. இருவரின் சொந்த வாழ்க்கையைப்பற்றி, குடும்பம், உற்றார் உறவினர் பற்றி. இடையில் அவனுக்கு சாப்பிட பேன் கேக் செய்து தருகிறார்.
பின்னர், ஏதாவது புத்தகத்தை படித்து காட்டட்டுமா என்று கேட்கிறார். அவன் சரி என்கிறான்.
பைபிளையும், தான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகமான "பயனுள்ள வாழ்க்கை" என்ற புத்தகத்தையும் எடுத்துக்கொள்கிறார். அந்த புத்தகத்தில் தான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் பக்கத்தை திருப்பி, அதில் ஒரு பத்தி படித்து முடிக்கிறார். அது அவன் மனதைத் தொட்டிருக்க வேண்டும். அந்த பத்தியை நிக்கலோஸ் மறுபடியும் படிக்கச் சொல்கிறான்.
பின்னர் வாழ்க்கையப்பற்றியும் வாழ்க்கையின் அர்த்தங்ககளைப்பற்றியும் பேச்சு செல்கிறது.
இந்த பேச்சு அவன் மனதில் ஏதோ மாறுதலை உண்டாக்குகிறது. ஒரு சமயத்தில், அவன் ஆஷ்லி ஸ்மித்-ஐ கடவுள் அனுப்பிய தேவதையாகவே பார்க்கிறான் - தான் மேன்மேலும் செய்ய இருக்கும் தவறுகளை திருத்துவதற்காக.
பின்னர் அவன் கேட்கிறான், 'நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?".
"நீங்கள் சரணடைய வேண்டும், ஏனெனில் நீங்கள் வெளியே இருந்தால், அது மற்றவர்களுக்கு மட்டுமல்ல, உங்கள் உயிருக்கும் ஆபத்து" என்கிறார்.
அவன் கேட்கிறான், "நான் இன்னமும் இரண்டு, மூன்று நாட்களாவது இங்கு தங்கி இருக்கிறேனே, எனக்கு அமைதியாக சிந்திக்க இடமும், உணவும் வேண்டும்".
இவவாறு பேசிக்கொண்டே, அவனுடய நம்பிக்கையப்பெற்றபின், தன் குழந்தையை பார்க்கச்கெல்ல அனுமதி கேட்கிறார். அவனும் ஒருவாறு சம்மதிக்கிறான்.
பின்னர் காரில் ஏறியவுடன் செல்ஃபோன் மூலமாக, போலிஸுக்கு 911 கால் செய்கிரார். போலிஸ் வந்தவுடன், எந்தவித அசம்பாவிதமும் நிகழாவண்ணம், அமைதியாக சரணடைகிறான் நிக்கலோஸ், தனது வெள்ளை ட்-ஷ்ர்ட் -ஐ சமாதானக்கொடி போல வீசியபடி.

சம்பவத்தின் செய்தி

பயனுள்ள வாழ்க்கை புத்தகம்

ஆஷ்லி ஸ்மித் - 40,000$ பரிசு செய்தி

2 comments:

  1. Anonymous12:33 PM

    சரியான ப்ளாக்!! ரொம்ப சுவாரசியம்...

    ReplyDelete
  2. Anonymous10:29 PM

    கோகிலா, பாலாஜி-பாரி, தங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete